போரைத்தடுப்போம்
கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நாம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை!
உழைப்பை மதித்து
பலனை கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கு ஏற்றிடுவோம்!
கபிலன் விஸ்வநாதன்:
இந்தப் பாடலில் அமைதி நிறைந்த உலகிற்கு வழி காட்டுகிறார். மக்கள் அனைவரும் சமம் . உயர்வு , தாழ்வு ஏதுமில்லை. ஒற்றுமையாய் வாழ்ந்து முன்னேற வேண்டும்.
No comments:
Post a Comment