சிக்கனம்
கவிஞர் சுரதா
உரைநடையின் சிக்கனம்தான் கவிதை
ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம்தான் அடக்கம்
ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம்தான் அடக்கம்
உரிமைகளின் சிக்கனம்தான் சட்டதிட்டம்
உணவுகளின் சிக்கனம்தான் பங்கீடாகும்
அரசியலின் சிக்கனம்தான் இரண்டே கட்சி
அனுபவத்தின் சிக்கனம்தான் நீதிநூல்கள்
பேரோடும் புகழோடும் வாழ்வதற்குப்
பேரறிவே துணைபுரியும்; நாமெல்லோரும்
சீரோடும் , சிறப்போடும் வாழ்வாதற்குச்
சிக்கனம்தான் துணைபுரியும்!
சுரதா 1921 முதல் 2006 வரை வாழ்ந்தார். சிக்கனம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கவிதை மூலம் கூறியுள்ளார். நான் இந்தக் கவிதையைப் படிப்பதற்கு முன்னர் சிக்கனம் பணத்திற்கு மட்டும் தான் என்று நினைத்தேன் . ஆனால் படித்த பின்னர் சிக்கனம் வாழ்வில் அனைத்திற்கும் பொருந்தும் என்று தெரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment