Thursday, January 23, 2014

திவ்யா தமிழ்மணி வழங்கிய கவிஞர்.சுரதா அவர்களின் சிக்கனம் கவிதை.

                                  

திவ்யா தமிழ்மணி 
                         சிக்கனம்
                           கவிஞர்.சுரதா                 
                                       
பகட்டுவாழ்க்கை நீராவி போன்றதுவாம் 
சிக்கனம்தான் நீரூற்றைப் போன்றததுவாம் !
சிக்கணத்த்தை வேரோடு பெயர்த்தெரிந்து வறுமையுற்று
விக்கி விக்கி அழுதவர்கள் பலபேருண்டு!
தாராள மனப்பான்மை என்று சொல்லித்
தண்ணீர் போல் பணத்தையெல்லாம் செலவு செய்தல்
தீராத வறுமைக்கு வித்தாம் ; வாழ்வில் 
சிக்கனம்தான் ஒருவனுக்குச் சிறந்த சொத்த்தாம் ;
சீராக செட்டாக ஒவ்வோர் நாளும் சிக்கனமாய் 
பெரியோர் போல் வாழ்ந்து வந்தால் 
பாறாங்கள் மீது விழும் மழை நீர் போலப்
பளிச்சென்று  துன்பமெல்லாம்  சிதறிப் போகும் !

திவ்யா தமிழ்மணி: 
சிக்கனத்தோடு  வாழ்ந்தால் சீரும் சிறப்பும் கிட்டும் ,
சிக்கனமே சிறப்பைத்தரும் . 

No comments:

Post a Comment