திவ்யா தமிழ்மணி
சிக்கனம்
கவிஞர்.சுரதா
பகட்டுவாழ்க்கை நீராவி போன்றதுவாம்
சிக்கனம்தான் நீரூற்றைப் போன்றததுவாம் !
சிக்கணத்த்தை வேரோடு பெயர்த்தெரிந்து வறுமையுற்று
விக்கி விக்கி அழுதவர்கள் பலபேருண்டு!
தாராள மனப்பான்மை என்று சொல்லித்
தண்ணீர் போல் பணத்தையெல்லாம் செலவு செய்தல்
தீராத வறுமைக்கு வித்தாம் ; வாழ்வில்
சிக்கனம்தான் ஒருவனுக்குச் சிறந்த சொத்த்தாம் ;
சீராக செட்டாக ஒவ்வோர் நாளும் சிக்கனமாய்
பெரியோர் போல் வாழ்ந்து வந்தால்
பாறாங்கள் மீது விழும் மழை நீர் போலப்
பளிச்சென்று துன்பமெல்லாம் சிதறிப் போகும் !
திவ்யா தமிழ்மணி:
சிக்கனத்தோடு வாழ்ந்தால் சீரும் சிறப்பும் கிட்டும் ,
சிக்கனமே சிறப்பைத்தரும் .
No comments:
Post a Comment