Friday, November 22, 2013

அநிருத் ஸ்ரீனிவாசராகவன் எடுத்துரைத்த ஔவையாரின் மூதுரை




இந்த வாரம் அநிருத் ஸ்ரீனிவாசராகவன் எடுத்துரைத்த ஔவையாரின் மூதுரை மற்றும் அதைப் புரிந்து கொண்டு அவர் கூறிய கருத்துக்களும்.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்.

அநிருத் : குளத்தில் நீர் அளவைப் பொறுத்துத் தாமரை பூப்பது போல் கற்கும் நூல் அளவைப் பொறுத்து நம் அறிவு.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

அநிருத் : நல்லவர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேச்சைக் கேட்பதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் நன்று. அவர்களோடு தொடர்ந்து பழகி வருதல் மிகவும் நன்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

அநிருத் : நெல்லுக்கு விடும் நீர், புல்லுக்கும் போய் சேர்வது போல் நல்லவர்கள் உள்ள இடத்தில் பெய்யும் மழை மற்றவர்களுக்கும் போய்சேர்கிறது.

No comments:

Post a Comment