Friday, November 15, 2013

மூதுரை - ஔவையார்



     
ப்ரணவ் குமார் வழங்கிய மூதுரை.
                       மூதுரை
                          - ஔவையார்

நல்லவர்க்குச் செய்த உதவி

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
என்று தருங்கொல்? என வேண்டா- - நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.


பொருள்
தெங்கு - தென்னைமரம்

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கான பதில் உதவியும்,நன்றியும் எப்போது கிடைக்கும் என்று நினைத்துச்  செய்யக்கூடாது. தனக்கான  உணவை அதாவது நீரை வேர் மூலமாக எடுத்துக் கொண்டாலும், நன்கு வளர்ந்த பின்பு தென்னை மரம் அந்நீரைச் சுவையான  இளநீராகத் தந்துவிடும்.  அதுபோல  ஒருவர்க்குச் செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம்  நிச்சயம்  நன்மையைத்  தரும்.

மேன் மக்கள் இயல்பு

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

பொருள்
நட்புடன் பழகும் எண்ணமில்லாதவர்களிடம் நட்புடன் பழகினாலும் அவர்கள் நண்பர்களாகப் பழக மாட்டார்கள்.  தன்னுடைய  நிலை தாழ்ந்தாலும், நற்பண்புடையோர்  நண்பர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எத்தனை நேரம் காய்ச்சினாலும் சுவை குன்றாதப்  பாலையும், தீயிலிட்டுச் சுட்டாலும் தன்னுடைய நிறம் மாறாது மேலும் மேலும் வெண்மையாகும் சங்கினைப் போன்றதாகும் அவர்களுடைய  நட்பு.

காலமறிந்து நடத்தல்

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

பொருள்
நன்கு வளர்ந்து கிளைகளோடு கூடிய நீண்ட மரமாக இருந்தாலும் குறித்த பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேலும் மேலும்  எவ்வளவு  முயன்றாலும் நாம் செய்யும் செயல்களும்  அதற்குரியத் தகுந்த காலம் வந்தால் மட்டுமே பயன் அளிக்கும்.

No comments:

Post a Comment