கம்பராமாயணம்
- கவிச் சக்கரவர்த்தி கம்பர் (1180 -280)
நித்யா:
கம்பரின் கவிச்சிறப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைசிறந்தது. நான் இப்பொழுது
கம்பரின் கவிச்சிரிப்பிற்கு இரண்டு பாடலை உங்கள் முன் சொல்ல ஆசைப்படுகிறேன்.வஞ்சக எண்ணம்
கொண்ட கைகேயி இராமரிடம், உனது தந்தை உனக்குச் சொல்லச் சொல்ல நான் இராமர் உனக்கு சொல்லலாமா
என்று நயமாகப் பேசுகிறாள். அதற்கு இராமர் சொல்லும் பதில்தான் இந்தப் பாடல்.
மன்னவன் ஆணையைக் கூற இராமன் பணிந்துரைத்தல்:
எந்தையே ஏவ, நீரே
உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்’ என்றான்.
உய்ந்தனென் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்’ என்றான்.
நித்யா :இந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா? அப்பா கட்டளையிட, நீங்கள் அதை எனக்குச் சொல்ல நான் என்ன தவம் செய்தேனோ...எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீங்கள்தான் ....எனக்குக் கட்டளை இடுங்கள் என்கிறார் இராமர்.
கைகேயி தெரிவித்த மன்னின் ஆணை:
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ்
இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற்கொண்டு,
பூழி
வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டின்
ஆண்டின் வா"
என்று, இயம்பினன் அரசன்' என்றாள்.
நித்யா: இந்தப்
பாடலின் கருத்து என்ன
தெரியுமா? கடல்
சூழ்ந்த இந்த
உலகை
பரதன் ஆளவேண்டும்.நீ கொடிய காட்டிற்குச் சென்று கடுமையான தவம் செய்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வா என்று உனது அரசன் சொன்னார் என கைகேயி சொல்கிறாள்.