தமிழின் தொன்மை வரலாறு
=======================
தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.
1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துகள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துகள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசுச் சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டடக்கலைகள், சிற்பங்கள்
இவை போன்ற சான்றுகள் பற்பல உள்ளன. தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன!
தமிழ்மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்த மொழி. இதற்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றின என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ன காலத்தில்தான் தோன்றின எனத் திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு, தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம்.
தொன்மைக் காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தில்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களைத் தமிழ்மொழி எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அவை:
1. தென்பிராமி என்கிற தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துகள்
3. கோலெழுத்துகள்
4. மலையாண்மை
இவற்றுள் தென்பிராமி (எ) தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அரசர் அசோகர் தன் கல்வெட்டுகளில் பயன்படுத்திய எழுத்து பாலியும் பிராமியுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
முதல் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழ்நாட்டில், முதன் முதலில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் ‘தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை எனும் ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, ஏராளமான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்பதை 1924ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யராவார்.
தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே! குமரிக்கண்டத்தில் கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே! பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டமெட்டினர்! பழம்பாண்டி நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டிச் சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.
குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக் கொண்ட திராவிடத் தமிழன், உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து உலகெங்கும் நிலைத்தான். நான்கு முறை ஏற்பட்ட கடல்கோள்களால் (சுனாமிகளால்) தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்தன.
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்ற பெருநகர நாகரிகத்தைப் படைத்த தமிழ்த் திராவிடன், வடக்கிலும், இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே!
இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்!
நன்றி; தமிழும் சித்தர்களும் முகநூல் பக்கம்.
=======================
தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.
1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துகள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துகள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசுச் சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டடக்கலைகள், சிற்பங்கள்
இவை போன்ற சான்றுகள் பற்பல உள்ளன. தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன!
தமிழ்மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்த மொழி. இதற்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றின என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ன காலத்தில்தான் தோன்றின எனத் திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு, தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம்.
தொன்மைக் காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தில்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களைத் தமிழ்மொழி எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அவை:
1. தென்பிராமி என்கிற தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துகள்
3. கோலெழுத்துகள்
4. மலையாண்மை
இவற்றுள் தென்பிராமி (எ) தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அரசர் அசோகர் தன் கல்வெட்டுகளில் பயன்படுத்திய எழுத்து பாலியும் பிராமியுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
முதல் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழ்நாட்டில், முதன் முதலில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் ‘தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை எனும் ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, ஏராளமான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்பதை 1924ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யராவார்.
தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே! குமரிக்கண்டத்தில் கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே! பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டமெட்டினர்! பழம்பாண்டி நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டிச் சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.
குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக் கொண்ட திராவிடத் தமிழன், உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து உலகெங்கும் நிலைத்தான். நான்கு முறை ஏற்பட்ட கடல்கோள்களால் (சுனாமிகளால்) தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்தன.
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்ற பெருநகர நாகரிகத்தைப் படைத்த தமிழ்த் திராவிடன், வடக்கிலும், இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே!
இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்!
நன்றி; தமிழும் சித்தர்களும் முகநூல் பக்கம்.