Friday, October 31, 2014

தமிழின் தொன்மை வரலாறு
=======================

தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.

1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள்

2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துகள்

3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துகள்

4. இலக்கியச் சான்றுகள்

5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்

6. பழைய நாணயங்கள்

7. அரசுச் சாசனங்கள்

8. அரசர்களின் ஆவணங்கள்

9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)

10. கோயில் ஒழுங்குகள், கட்டடக்கலைகள், சிற்பங்கள்

இவை போன்ற சான்றுகள் பற்பல உள்ளன. தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன!

தமிழ்மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்த மொழி. இதற்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றின என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ன காலத்தில்தான் தோன்றின எனத் திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு, தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம்.

தொன்மைக் காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தில்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களைத் தமிழ்மொழி எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவை:

1. தென்பிராமி என்கிற தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துகள்
3. கோலெழுத்துகள்
4. மலையாண்மை

இவற்றுள் தென்பிராமி (எ) தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அரசர் அசோகர் தன் கல்வெட்டுகளில் பயன்படுத்திய எழுத்து பாலியும் பிராமியுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழ்நாட்டில், முதன் முதலில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் ‘தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை எனும் ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, ஏராளமான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்பதை 1924ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யராவார்.

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே! குமரிக்கண்டத்தில் கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே! பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டமெட்டினர்! பழம்பாண்டி நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டிச் சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக் கொண்ட திராவிடத் தமிழன், உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து உலகெங்கும் நிலைத்தான். நான்கு முறை ஏற்பட்ட கடல்கோள்களால் (சுனாமிகளால்) தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்தன.

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்ற பெருநகர நாகரிகத்தைப் படைத்த தமிழ்த் திராவிடன், வடக்கிலும், இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே!

இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்!


நன்றி; தமிழும் சித்தர்களும் முகநூல் பக்கம்.

Friday, October 24, 2014

சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

                          சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

சங்ககால மக்கள் இசைத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சிப்பண், பாலைப்பண், மருதப்பண், படுமலைப்பண், விளரிப்பண், காமரப்பண், ஆம்பல் பண் எனப் பல்வேறு பண்களையும் காலை, மாலை எனப் பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர். நரம்பு, துளை, தோல், கஞ்சம் என நான்கு வகையான இசைக்கருவிகளோடு குரலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.

இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின் வழி புள்ளினங்கள், விலங்கினங்கள் இசைக்கு மயங்கிய தன்மைகளையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யானை யாழோசைக்குக் கட்டுப்பட்டதை,
காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தாங்கியாங்கு’ (கலித்தொகை)
யானைப் பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானைகூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கியமை புலப்படுத்தப்படுகிறது.

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான் இன்னிசை கேட்டு பயம் நீங்கியதைக் கீழே உள்ள வரிகள் மூலம் உணரமுடியும்.

செந்நாய் வெரீஇ புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீர்இடைஅகநானூறு

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாம்பழ ஓட்டின் துளை வழியே வரும் வெப்பமான காற்று இனிய ஓசையோடு வருவதைக் கேட்கிறது. அவ்வோசை கோவலரின் குழலோசை என்றே கருதுகிறது.  அதனால் அச்சம் நீங்குகிறது என்பர் கயமனார்.

இசையின் இனிமையில் மயங்கிய கிளிகளைப்பற்றி,
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’(குறுந்தொகை)
இப்பாடலில் தினைகளில் விழும் கிளிகளை விரட்டச்சென்றாள் ஒரு தலைவி. குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். அங்கு வந்த கிளிகளோ குளிர் என்னும் இசைக்கு மயங்கின.
தலைவியின் குரலைத் தம் இனத்தின் குரலே என்று எண்ணிய கிளிகள் வேறிடம் செல்லாது அங்கேயே தங்கின. அதனால் வருந்திய தலைவி அழுதாள் இதையே இப்பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில் இசைக்கு கிளிகள் மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களையே மயக்கும் இசை ஆறறிவு படைத்த மனிதனை மேலும் மயக்குவதாக இருந்தது. மனிதன் தான் விரும்பிய இசையை மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தான். 

Friday, October 17, 2014

பிறப்பும் இறப்பும்....

நம்பிறப்பும் இறப்பும் ஒன்றுதான்ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாதுமக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும்பிறப்பின் போதுமகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறதுஇது தவறான கருத்துநம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை.அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானதுஏனென்றால்  பிறப்பில்லாமல் இறப்பில்லை.
 தாயின்வயிற்றில் இருப்பது எப்படியிருக்கும் என்று மனிதர்கள் உணர்வார்கள்.அது               எவ்வளவு வசதியற்றதாக இருக்கும்! ஒருகுடிசையில் ஒரு நாள் தங்குவதே மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் கதவு சன்னல்களை மூடிவிட்டோமானால் மூச்சு விடவே முடிவதில்லை. பின் தாயின்வயிற்றில் ஒன்பது மாதம் கழிப்பது என்பது எப்படி இருக்கும்? 
இருந்தாலும் தலையை மறுபடியும் அங்கேயே நுழைக்கப் பார்க்கின்றோம், கழுத்தை     மீண்டும் சுருக்கில்மாட்டிக் கொள்ளவே விரும்பு கின்றோம்.
மரணத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், வாழ்க்கையே குழப்பமாகத்தான் தோன்றும். 
புத்தர்அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ்காலத்தின் உண்மையான  நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால்கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும்.
தோன்றும் பொருள் எல்லாம் நிலையற்றவை என்று "அனைத்தும் புரிந்த அந்த ஒருவனுக்குத்" தெளிவாகத் தெரியும். அதனால் அந்த "அனைத்தும்தெரிந்தவன்" மகிழ்வதும் இல்லை; வருந்துவதும் இல்லை. ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளை வன் தொடர்வதில்லை. மகிழ்ச்சியடைவதுபிறப்பதற்குச் சமம்; சோர்வடைவது இறப்பதற்குச் 
சமம். இறந்த பிறகு மறுபடியும் பிறக்கின்றோம். பிறந்ததால் மறுபடியும் இறக்கின்றோம். நொடிக்கு நொடிபிறப்பதும் இறப்பதும் தான் முடிவற்றுச் சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரமாகும்