“வேலைகள்
அல்ல வேள்விகள்!”
கவிஞர் தாரா பாரதி
கட்டை விரலை விடவும்
இமயம் குட்டை என்பதை எடுத்துச் சொல்!
உன் சுட்டு விரலின் நகமாய்
வானம் சுருங்கியதென்று முழக்கிச்சொல்!
தோள்கள் உனது தொழிற்சாலை
நீ தொடும் இடம் எல்லாம் மலர்ச்சோலை
தோல்விகளே உனக்கு இல்லை
இனி தொடுவானம் தான் உன் எல்லை!
கால்நகம் கீறிய கோடுகள் – வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் – உன்
தோள்கள் இரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலம் இடும்!
மண்புழுவல்ல மானிடனே உன்
மாவலி காட்டு மானிடனே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே – இவை
வேலைகள் அல்ல! வேள்விகளே!
அதுல் ஸ்ரீனிவாசராகவன்
சாதிக்க
நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் செய்வதை வேலையாக நினைக்காமல் சாதனையாகக் கருதி வெற்றிகரமாக
முடிப்பதற்கு முயற்சி
செய்ய
வேண்டும்.
No comments:
Post a Comment