Thursday, September 26, 2013

நம்மொழிக்குத் " தமிழ்" என்று பெயர் வந்த கதை !

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

" தமிழ்" என்ற  பெயர்  எப்படி  வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற -        ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள -     ஆறும் இடையினம்.

உலக மனிதன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்,
அ -   (படர்க்கை)
இ -   (தன்னிலை)
உ -  (முன்னிலை)   
என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில், 

 வல்லினத்தில் ஒன்றும்  -     த்    [த்+அ= த]
மெல்லினத்தில் ஒன்றும்  -   ம்    [ம்+இ=மி]
இடையினத்தில்ஒன்றும்-     ழ்    [ழ்+உ= ழு]    
              ஆக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

No comments:

Post a Comment