நம்மொழிக்குத் " தமிழ்" என்று பெயர் வந்த கதை !
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
" தமிழ்" என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.
உலக மனிதன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்,
அ - (படர்க்கை)
இ - (தன்னிலை)
உ - (முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில்,
வல்லினத்தில் ஒன்றும் - த் [த்+அ= த]
மெல்லினத்தில்
ஒன்றும் - ம் [ம்+இ=மி]
இடையினத்தில்ஒன்றும்- ழ் [ழ்+உ= ழு]
ஆக மூன்று மெயெழுத்துக்களைத்
தேர்ந்தெடுத்தனர். இந்த மூன்று
மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
No comments:
Post a Comment