கிரந்த எழுத்துமுறை
கிரந்தஎழுத்து முறை, தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிமாகும். கிரந்தம் என்றால் வடமொழியில் புத்தகம் என்று பொருள். புத்தகத்தில் எழுதப் பயன்படுத்த எழுத்துகள் கிரந்த
எழுத்து முறை என்றழைக்கப்பட்டது. கிரந்த எழுத்துமுறை கி.பி 5-ஆம் நூற்றாண்டுகளில் பிராமி
எழுத்துமுறையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடமொழியை எழுதுவதற்காகத்
தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களைச் செய்ததன் விளைவாகவாகக் கிரந்த எழுத்துமுறை
தோன்றியதென்றும், எனவே அக்காலத் தமிழ் எழுத்துக்களின் நீட்சியே கிரந்த எழுத்துமுறை
என்றும் கூறப்படுகிறது.
கிரந்த எழுத்துக்களைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்கள்
என்று அவர்களது கல்வெட்டுக்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. பல்லவர்கள் பயன்படுத்தியதால்
அது பல்லவகிரந்தம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில்
கிரந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சிறிது காலத்திற்குப்பின்னர் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெரும்பகுதி குறைந்து விட்டது.
மேலும் கிரந்த எழுத்துமுறை பற்றி அறிந்துகொள்ள… http://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை
No comments:
Post a Comment