கும்பல் கூட்டம் - விளக்கம்
கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்கா து. கூட்டம் என்பது அடக்குமுறையையும்,சர்வாதிகாரத் தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத் தாலும் சந்திக்கும்.
கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும்.
கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின்,பைத்தியக்காரத்தனத் தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு.
ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியது.
ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியது.
No comments:
Post a Comment