Friday, May 2, 2014

கும்பல்-கூட்டம் விளக்கம்

   கும்பல் கூட்டம் - விளக்கம்

கும்பல் என்பது கூடிக் கலைவதுகூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பதுகூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்ஆனால்சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும்,சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும்சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.
கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்எப்படி என்று தெரியாது கலையும்.
கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின்,பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு.

ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியது.